ஈழத்தமிழ் மக்கள் மீதான இனவெறிப் போரில்சிங்களப் பாசிச அரசுடன் கைகோர்த்து நிற்கும்இந்திய அரசைக் கண்டித்து சென்னையில் மறியல் இடம் ரிப்பன் மாளிகை அருகில் காலை 10.30 மணிக்கு
அன்பார்ந்த நண்பர்களே நம் தமிழ் மக்கள் ஈழத்தில் கொண்றொழிக்கப்படுகிறார்கள். நீங்கள் யாராக வேண்டுமானாலும், இருக்கலாம் நம் இனம் வரலாற்றில் துடைத்து எறியப்படுகிறது இதை யாராலும் பார்த்து பொறுத்துக்கொண்டு இருக்க முடியாது. நாம் இங்கிருந்து கொண்டு செய்ய முடிவது ஒன்று மட்டும் தான், இந்த இனப்படுகொலை போரில் சிங்கள பாசிசத்துக்கு பங்காளியாக கொலைக்களத்தில் நின்று ரத்தம் குடிக்கும் இந்திய அரசின் பயங்கரவாதத்தை நடுவீதிகளில் இறங்கி நம் மக்கள் முன் அம்பலப்படுத்தி இந்திய அரசின் துரோகத்தனத்தை தோலுரித்து காட்ட வேண்டியது நமது கடமை அதை இங்கு யாரும் செய்யாத நிலையில் ம.க.இ.க வின் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முண்ணனி நாளை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ரிப்பன் மாளிகை எதிரில் சாலையில் அமர்ந்து மறியலை நடத்த இருக்கிறது. இதில் நம் தமிழ் மக்களை நேசிக்கும் ஒவ்வொருவரும், மனிதநேயம் உள்ள மனிதன் ஒவ்வொருவரும் இதில் கலந்து கொள்ள வேண்டும். கலந்து கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்புடன் சாலைகளில் அமர்ந்து இருப்போம். வாருங்கள் தோழர்களே...

பிரச்சார இயக்கத்தின் முழக்கங்கள்:
கொலைகாரன் மன்மோகன் சிங்கே,உன் டாடாவும், அம்பானியும்
இலங்கையில் கொள்ளை லாபம் அடிக்க
எங்கள் ஈழத்தமிழர்கள் சாக வேண்டுமா?
இந்திய ஆளும் வர்க்கங்களின் தெற்காசியமேலாதிக்கத்திற்காக,
டாடா-அம்பானி போன்ற தரகு முதலாளிகள்
இலங்கையில் கொள்ளை இலாபம் ஈட்டுவதற்காக,
சிங்கள இனவெறி இராணுவத்திற்கு
ஆயுதமும் பயிற்சியும் கொடுத்து ஏவிவிடும்
கொலைகார மன்மோகன் சிங் அரசை
எதிர்த்துப் போராடுவோம்!
ஈழத் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்குக்குரல் கொடுப்போம்!
நன்றி
R.S.Y.F
ஈழம்: தமிழகமெங்கும் புரட்சிகர அமைப்புகளின் போராட்டம் !ஈழம்: சென்னையில் ம.க.இ.க ஆர்பாட்டம் ! படங்கள், வீடியோ !!ஈழம்: முத்துக்குமாரை கொன்ற தீ சுரணையற்ற மனங்களை சுடட்டும்!








